2025 மே 03, சனிக்கிழமை

வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்

Niroshini   / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ். நிதர்ஷன்

கொக்குவில் - கேணியடிப் பகுதியில், நேற்று  (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்ற இளைஞனே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த 3 பேர், இவ்விளைஞன் மீது வாள்வெட்டை நடத்திவிட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

          

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X