Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதிய விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்துடன், படுகாயமடைந்த மகன், சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏ-9 நெடுஞ்சாலை - செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (23) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்தவிபத்தில் அதே இடத்தை சேர்ந்த கதிரவேலு லட்சுமணன் உயிரிழந்துள்ளார். இவர், 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
50 minute ago
1 hours ago