Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
காலையில், வீடொன்றை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவமொன்று, மாதகல் - நாவலர் வீதியில், நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர், காலையில் கோவிலுக்குச் சென்றிருந்த போதே, இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் நகரில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை, இளவாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து, திருட்டுப் போன நகைகள் சிலவும் 37 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .