2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வீதியில் நடமாடியோருக்கு எதிராக நடவடிக்கை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில், யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்றைய தினம் இரவு, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில், திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதன் போது, அநாவசியமாக வீதியில் நடமாடியோர் பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன், அவர்களின் விவரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 

இதேவேளை, அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X