2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செலயகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

புதிய அரசாங்கம் வழங்கவிருப்பதாக கூறப்படும் வேலைவாய்ப்பில் தங்களை முன்னிலைப்படுத்தி உள்வாங்க வேண்டும் எனக்கோரி இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோருக்கு மகஜர்கள் கையளித்தனர்.

பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள், தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் இணைந்து இந்தப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .