2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சீமெந்து தொழிற்சாலை இரும்பு திருட்டு; 15பேருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 மே 02 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன், நா.நவரத்தினராசா

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள இரும்பு திருடிய 15பேரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று (02) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணிக்கான அனுமதி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது.

துப்பரவுப் பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதிக் காலம் முடிவடைந்த நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளரின் பணிப்புரைக்கமைய 14பேர் தொழிற்சாலையில் இரும்பு வெட்டும் நடவடிக்கையில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் குறித்த 14 பேரையும் கைது செய்து, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கொழும்பு மல்வானை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து 15பேரையும் கடந்த புதன்கிழமை (30) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்ததாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X