2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் சிறு குற்றம் புரிந்த 151பேர் கைது

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் பற்றி தெரிவித்தார்.

யாழில் சிறுகுற்றம் புரிந்த 151பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையில்,

பிடியானை பிறப்பிக்கப்பட்ட 30 பேரும் சந்தேகத்திற்கு .இடமானமுறையில் நடமாடிய 10 பேரும் பொது இடத்தில் மது அருந்திய 04பேரும் மதுபோதையில் வாகனம்  செலுத்திய 08 பேரும் சட்டவிரோத மது விற்பனை செய்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தாக இருவரும் அடித்து காயமேற்படுத்திய 25 பேரும் திருட்டில் தொடர்புபட்ட 05 பேரும் மோசடியில் ஈடுபட்ட ஐவரும் கொள்ளையடிப்பில் ஈடுபட்ட இருவரும் வீதிவிபத்துக்கு காரணமானவர்கள் இருவரும் குடிபோதையில் கலகம் விளைவித்த ஒருவரும் பாரிய குற்றம் புரிந்த இருவரும் ஏனைய குற்றம் புரிந்த 38 பேரும் உட்பட 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

யாழ். நகரில் அண்மித்த பகுதிகளில் 41 இலட்சத்து 690 ரூபா பெறுமதியான காசோலைகள் வியாபார நோக்கதுடன் பெற்று மீளச் செலுத்தப்படவில்லையென பொலிஸ் யாழ்.நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காசோலை மோசடி செய்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின்  பிரகாரம் பொலிஸாரினால் காசோலை மோசடி செய்தவர்கள்; கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .