2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் காலாவதியான பொருள் விற்பனையில் ஈடுபட்ட34 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், 34 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். மாவட்ட பாவணையாளர் அதிகார சபையினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் மல்லாகம் போன்ற பிரதேசங்களில் பாவணையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது மேற்படி வர்த்தகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், யாழ்ப்பாணம் நீதிமன்றில் 9 பேருக்கும், மல்லாகம் நீதிமன்றில் 2 பேருக்கும், பருத்தித்துறை நீதிமன்றில் 22 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 9 வர்த்தகர்களில் 2 வர்த்தகர்களுக்கு 6 ஆயிரம் ரூபா அபராதமும், மல்லாகம் நீதிமன்றில் 3 வர்;த்தகர்களுக்கு 4ஆயிரத்தி 500 ரூபா அபராதமும், பருத்தித்துறை நீதிமன்றில் 22 வர்ததகர்களில் 2 வர்த்தகர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X