2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் சிறு குற்றச்செயல் புரிந்த 72 பேர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மற்றும் காங்கேசன்துறை பகுதியில் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 72பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் அதனை தெரிவித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 27பேர், மது போதையில் இடையூறு விளைவித்தவர்கள் 14பேர், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 10பேர், சுற்றுச் சூழல் மாசடையும் வகையில் குப்பைக் கூழங்களை வீசியவர்கள் 15பேர், அனுமதியின்றி மணல் ஏற்றியவர், சமாதானத்திற்கு எதிராக இடையூறு விளைவித்த இருவர், மாடு வெட்டிய ஒருவர் உட்பட 72பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .