2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழில் கடந்தவாரம் 19 இலட்சம் ரூபா கொள்ளை

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், வியாபார நிலையங்கள், ஆலயங்களை உடைத்தும் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் மூலமும் 19 இலட்சத்து 9 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியான நகைகள், பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவங்களினுடைய தொடர்புடைய சிலர்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இவற்றில் அதிகப்படியான தொகையாக கொக்குவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25)8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X