2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1005 தாதியர்கள் தேவை

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த் 


யாழ். போதனா வைத்தியசாலைக்கு 1400 தாதியர்கள் தேவையாகவுள்ள போதும் தற்போது 395 தாதியர்களே கடமையாற்றுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், யாழ். போதனா வைத்தியசாலை கட்டிடங்களும் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதற்கு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அதிகளவான கட்டிடங்கள் காணப்படுவதால் நோயாளர்கள் சுவாசிப்பதற்கும் அப்பகுதியில் செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எதிர்காலத்தில் கட்டிடங்கள் அமைப்பதாக இருந்தால் வேறு இடத்தில் அமைக்குமாறு அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X