2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குற்றங்களில் ஈடுபட்ட 160 பேர் யாழில் கைது

Kanagaraj   / 2014 மே 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா
 
குற்றங்கள் புரிந்த  160 பேர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை(02) தெரிவித்தார்.
 
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(02) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 28 பேரும், சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 28 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 09 பேரும்,  திருடிய குற்றச்சாட்டில் 03 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி விபத்து ஏற்படுத்திய 03 பேரும், மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள் 04 பேரும், அடித்து நட்டம் ஏற்படுத்திய ஒருவரும், சட்டவிரோத மது விற்பனை செய்த 12 பேரும், பாலியல் குற்றத்தில் ஒருவரும், அங்க சேஷ்டை புரிந்த ஒருவரும் கைதாகியுள்ளனர்.

இதே வேளை ஏனைய குற்றங்கள் புரிந்த 40 பேர் உட்பட மொத்தமாக 160  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X