2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மீனவர்கள் 20 பேர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

குருநகரைச் சேர்ந்த 20 மீனவர்கள் நாச்சிக்குடா கடற் பரப்பில் கடற் படையினரால் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டிலும் இழுவை படகை பயன்படுத்திய குற்றச்சாட்டிலும் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடற் படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 20 மீனவர்களும் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .