2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். நல்லூர் வருடாந்தத் திருவிழா 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

முக்கிய திருவிழாக்களான மஞ்சத்திருவிழா 13ஆம் திகதியும் கார்த்திகைத் திருவிழா 21ஆம் திகதியும் சந்தான கோபாலர் உற்சவம் 23ஆம் திகதி காலையும் அன்றையதினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும் 24ஆம் திகதி காலையில் வேல்விமானம் திருவிழாவும் இடம்பெறும்.

25ஆம் திகதி தண்டாயுதபாணி உற்சவமும் 26ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் 27ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 28ஆம் திகதி தீர்த்தோற்சவமும் மறுநாள் பூங்காவனமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X