2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

19.5 மில்லியன் ரூபா செலவில் சந்தைக் கட்டிடம் திறப்பு

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்
, நவரட்ணராசா

நல்லூர் பிரதேச சபையினால் 19.5 மில்லியன் ரூபா பெறுமதியில் காங்கேசன்துறை வீதியில் அமைக்கப்பட்ட கொக்குவில் சந்தைக் கட்டிடத் தொகுதி வெள்ளிக்கிழமை (02) காலை திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டிடத் தொகுதியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இணைந்து திறந்து வைத்தார்கள்.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சந்தையின் பெயர்ப் பலகையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் நினைவுக்கல்லினை நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனும் திரைநீக்கம் செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X