2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தேசிய கல்வி நிறுவக கல்விமாணி விரிவுரைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசியக் கல்வி நிறுவக கல்விமாணிப் பட்டநெறி 2ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேசியக் கல்வி நிறுவக யாழ். இணைப்பாளர் எஸ்.ஆர்.சத்தியேந்திரம் அறிவித்துள்ளார்.

கல்விமாணிப் பட்டநெறி 2ஆம் வருட மாணவர்கள் தங்கள் விரிவுரைகளுக்கு கட்டாயமாக வருகை தரவேண்டும் என்றும் பரீட்சைக்கான ஆயத்தநிலை விரிவுரைகள் நடைபெறவுள்ளதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரிவுகைகளுக்கு மாணவர்களின் வரவு கணிப்பீடு செய்யப்பட்ட பின்னரே மேற்படி மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X