2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பண மோசடி செய்த இருவருக்கு தடுப்புக்காவல்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடி செய்த இருவரை இருவார காலத்திற்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி தாயொருவரும் மகனொருவரும் பணம் பெற்றுள்ளனர்.

மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தவறாக பணம் வழங்கிய நபரையும் நீதிபதி எச்சரித்தார்.  இவ்வாறு பணம் வழங்கி தவறான செயல்களில் ஈடுபடுவதும் நீதிமன்றத்திற்கு வருவதும் குற்றமெனவும் நீதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X