Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்க அதிகாரிகளை ஒழுங்கிணைத்து விசேட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மீளக்குடியேறிய மக்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தராதரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டங்கள், தொழில் வாய்ப்புக்கள், தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மீளக்குடியேறிய மக்களின் ஜீவனோபாயத்தை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டே இச்செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .