2025 மே 19, திங்கட்கிழமை

இனந்தெரியாத நபர்களின் நடமாட்டத்திற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் என்ற பெயரில்  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன ஆர்பாட்டமொன்றில் இன்று புதன்கிழமை ஈடுபட்டது.

இனந்தெரியாத நபர்களுக்கு அரசாங்கம் ஏன்  அடைக்கலம் வழங்குகின்றதெனவும் அதன்  மர்மத்தை வெளிப்படுத்துமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரினர்.

சர்வதேசத்திற்கு இந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டத்தை  வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பல்கலைக்கழக வெளி வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தை அவதானிக்ககூடியதாக இருந்தது.



You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 07 September 2011 11:06 PM

    பேசாதிங்க பேசாதிங்க இதுக்கும் பயங்கரவாத சட்டம் வரும் . வாழ்க ஜனநாயகம் .வாழ்க வடக்கின் *** வசந்தம்

    Reply : 0       0

    ruban Thursday, 08 September 2011 04:12 AM

    ''கிரிஸ் வரும் முன்னே பொலிஸ்& இராணுவம் வரும் பின்னே ''

    Reply : 0       0

    meenavan Thursday, 08 September 2011 06:53 PM

    பேய்கள் அரசாண்டால் சாத்தான் வேதம் ஒதுவானாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X