2025 மே 19, திங்கட்கிழமை

புன்னாலைக்கட்டுவனில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், உயிரிழந்தவரின் மனைவியையும் மனைவியினுடைய தந்தையையும் கைதுசெய்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ஜெயந்திரன் (வயது 38) என்பவரே வெட்டுக்காயங்களுடன் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இவரது மரணம் தொடர்பாகவே உயிரிழந்தவரின் மனைவியும் மாமனும் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X