2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் மூழ்கி பெண் பலி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 02 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்குச் சென்ற பெண்ணொருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

சித்தங்கேணியைச் சேந்த சிவசுப்பரமணியம் மாலினி (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.

தாயாருடன் சென்ற இப்பெண் ஆற்றில் நீராடியபோதே ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தொண்டமனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X