2025 மே 19, திங்கட்கிழமை

யாழில். பொது சுகாதார பரிசோதகர் சங்கம், குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் சுகவீனப் போராட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 28 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                  (ஜெ.டானியல்)
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை சுகவீனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடுபூராகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மேற்கொண்ட சுகவீன விடுப்புப் போராட்டத்தில் தாமும் இணைந்துகொண்டதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கனகேஸ்வரன் சதீஸ் தெரிவித்தார்.

போக்குவரத்து கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தத்தமது வேலை செயற்பாட்டு அறிக்கையினை சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இடுவதில்லை என்றும் சுகாதார திணைக்களத்தினால் நடாத்தப்படும் கூட்டங்களுக்கு சமூகம் அளிப்பதில்லை என்றும் பதில் பிரதேச கடமைகளை மேற்கொள்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கனகேஸ்வரன் சதீஸ் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X