2025 மே 19, திங்கட்கிழமை

திருட்டில் ஈடுபட்ட நபருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை  உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 15.12.2011ஆம் ஆண்டு கொக்குவில் பகுதியிலுள்ள இவ்வீட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்நபர் 884,000 ரூபா பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நபரின் மீது வழக்கு தொடரப்பட்டு இவர் குற்றவாளியென அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்நபருக்கு ஒருவருட சிறைத்தண்டனை  விதித்து யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X