2025 மே 19, திங்கட்கிழமை

'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' கருப்பொருளில் சர்வதேச மாநாடு

Kogilavani   / 2012 ஜூலை 19 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (எஸ்.கே.பிரசாத்)
யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 'போருக்குப் பின்னரான அபிவிருத்தி' என்னும் கருப்பொருளில் சர்வதேச மாநாடு கே.கே.எஸ் வீதியில் உள்ள ரில்கா சிற்ரி ஹோட்டலில நாளை வெள்ளிக்கிமை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த 650 இற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் 300 இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதம அதீதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம சிறப்புரையாற்றவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X