2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 24 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களுக்கும் யாழ். நீதிவான் நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை புல்லுக்குளம் பகுதியில் ஆட்டோ ஒன்றில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேளை யாழ். பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டு மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா, சந்தேகநபர்கள் மூவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X