2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதிய மதுபான விற்பனை நிலையங்களுக்கு தடை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (ரஜனி)
யாழ்ப்பாணத்தில் புதிய மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக உதவி அத்தியட்சகர் என்.சோதிநாதன் இன்று தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனையில் 'போதை ஒழிப்போம்' என்னும் தொனிப்பொருளின் கீழ், 2011ஆம் ஆண்டிற்கு பின்னர் மதுபான விற்பனை நிலையங்களுக்கு புதிய அனுமதிகள் வழங்குவதற்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பல வருடங்களுக்கு  மேலாக இயங்கிவரும் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் பழைய மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் மதுவரி திணைக்களத்தின் மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக உதவி அத்தியட்சகர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X