2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கண்டாவளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் திறப்பு

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரான முருகேசு சந்திரகுமாரினால் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலக பிரிலுள்ள குமாரசாமிபுரம் கிராம மக்கள் கோரிக்கைககு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலேயே இந்த பொது நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

குமாரசாமிபுரம் கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், மீள்எழுச்சித்திட்டம் மற்றும் வடக்கின் துரித மீட்சி திட்டம் ஆகியவற்றின் பிரதிதிட்டப்பணிப்பாளர் விஜயகிருஸ்னண், ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் பிரதேச அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .