2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'யாழ். மாவட்ட விவசாய புத்தாக்கத்திற்கு கனடா அரசு உதவும்'

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.மாவட்ட விவசாய நடவடிக்கைகளை புத்தாக்கம் செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன்வந்துள்ளதாக இலங்கைக்கான கனடா தூதரக ஆலோசகர் ஜெனிபர் லலோன்டி தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதரக அபிவிருத்திக்கான ஆலோசகர் ஜெனிபர் லலோன்டி யாழ்.மாவட்ட அராசங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை சந்தித்து விவசாய அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணித்தியாலயங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், யாழ். மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ். மாவட்ட  விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் யுத்தத்தின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் நீர்ப்பாசனம் மற்றும் குளங்கள் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதுடன், உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, விசேடமாக கிராம புறங்களில் விவசாயிகள் பயன்படுத்தும்  வீதிகள் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையில், இனிவரும் காலங்களில் வடமாகாணம் மட்டுமன்றி யாழ். மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளில் புத்தாக்கம் ஏற்படுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஓரளவான நிதி வழங்குவதற்கு கனடா அரசாங்கம் முன் வந்துள்ளதாகவும், அதற்கான உதவிகளை தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கைக்கான கனடா தூதரக அபிவிருத்தி ஆலோசகர்   உறுதியளித்துள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .