2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் புடவை கடை தீயினால் எரிந்து நாசம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்றிரவு 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் புடவைக் வியாபாரத் தொகுதிகளைக் கொண்ட வீதியிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் வியாபார நிலையத்தினை பூட்டிவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த  தீ விபத்து ஏற்படடுள்ளதாகவும் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .