2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

9 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத். சுமத்தி தங்கராசா

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில்  தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

முதலாவது வடமாகாண சபை அமைச்சர்களுக்கான பதியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும், டெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்.பில் அங்கம் வகிக்கும்  5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோவில் அங்கம் வகிக்கும் இருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன்,  புளொட் அமைப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தர் தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரொலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மன்னார் உறுப்பினரான குணசீலன் ஆகியோரே இந்த பதவியேற்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • nanthakumar Friday, 11 October 2013 11:14 AM

    பதவிக்கா ஆசைப்பட்டு தமிழனின் உணர்பூர்வ வாக்கை பாழாக்கும் தமிழ் அரசியல்வாதி திருந்த வாய்ப்பே இல்லையா? கந்தா”

    Reply : 0       0

    Vas Friday, 11 October 2013 02:51 PM

    தமிழனுக்கு என்னும் சரியான உணர்ச்சி வரவில்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .