2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் வயோதிபர் காயம்: சாரதி கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், சுமித்தி தங்கராசா

யாழ்.அச்சுவேலியில், மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்தி வயோதிபர் ஒருரை விபத்துக்குள்ளாக்கிய சாரதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை (13) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், அச்சுவேலி தென்மூலைப் பகுதியைச் சேர்ந்த சின்னையா நல்லையா (வயது – 85) என்பவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், மாடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வயோதிபரை மோதிய முச்சக்கர வண்டியானது மரமொன்றில் மோதி தரித்து நின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதிக்கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்த அச்சுவேலிப் பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு சென்றபோது, முச்சக்கர
வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததும் அவரது வண்டியில் மதுப்போத்தல்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சாரதியைக் கைதுசெய்த பொலிஸார் முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .