2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பருத்தித்துறையில் கேரளா கஞ்சா 13 கிலோ வைத்திருந்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட வெற்றிலைக்கேணியினைச் சேர்ந்த மேற்படி நபரை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை கடற்கரையில் 13 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ஒருவரை கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பருத்தித்துறைப் பொலிஸார் மேற்படி நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதிமன்றம் இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .