2025 ஜூன் 23, திங்கட்கிழமை

படுகொலை செய்யப்பட்ட யாழ். வைத்தியசாலை ஊழியர்களுக்கு அஞ்சலி

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ்.போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட ஊழியர்களின் 26ஆவது நினைவு தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த 21 ஊழியர்கள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் நினைவு தினமான இன்றைய தினம், 21 ஊழியர்களின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா, பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .