2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புதிய பஸ் கட்டண விபரத்தை காட்சிப்படுத்தாத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுமித்தி தங்கராசா

தனியார் பஸ் வண்டிகளில் புதிய பஸ் கட்டண விபரங்களை காட்சிப்படுத்தாத பஸ் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வடமாகாண கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் தலைவர் பொ.கெங்காதரன் இன்று தெரிவித்தார்.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டண விபரத்தை பஸ் மிதி பலகைக்கு அருகில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

பஸ் கட்டணத்திற்கு அதிகமாகக் கட்டணங்களை அறவிடும் நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறிய அவர், தனியார் பஸ் வண்டிகளில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தவறுகள் ஏதும்  காணப்படின் வடமாகாண கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்திற்கு முறைப்பாடு செய்தால், அதன் பிரகாரம் தனியார் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு தெரிவித்து குறித்த பஸ் வண்டிச் சாரதி மற்றும் நடத்துநருக்கு  எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .