2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆளுநரின் உரையினை மூவர் புறக்கணிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், குணசேகரன் சுரேன்

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது வடமாகாண ஆளுநரின் கன்னியுரை இடம்பெற்றது. இதனை, தழிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் உரையினைப் புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .