2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கடற்தொழில் சம்மேளன சங்கத் தலைவர் வீட்டின் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

பருத்தித்துறையிலுள்ள கடற்தொழில் சம்மேளன சங்கத் தலைவர் வைத்திப்பிள்ளை அருள்தாஸின் வீட்டின் மீது நேற்றிரவு (14) இனம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, சின்னத்தோட்டம், மூன்றாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள அவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக வைத்திப்பிள்ளை அருள்தாஸ் தெரிவிக்கையில்,

நேற்றிரவு ஒரு மணியளவில் நான் வீட்டில் உறக்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென வீட்டின் வெளிப்புறத்திலிருந்து சத்தம் கேட்டதையடுத்து வெளியில் வந்து பார்த்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிச்சென்றதை அவதானித்தேன் என்றார்.

மேலும் இச்சம்வபம் தொடர்பாக இன்று (15) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .