2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காவலாளி மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த காவலாளி ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை முச்சக்கரவண்டியில் வந்த  இனந்தெரியாதோரே குறித்த காவலாளியை தாக்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். அச்சுவேலிப் பகுதியிலுள்ள வங்கியொன்றில்; காவலாளியாக கடமையாற்றும் இவர், கடமை முடிந்து சுன்னாகத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது இவரை பின் தொடர்ந்து முச்சக்கரவண்டியில்  வந்த இனம்தெரியாத 4 நபர்கள் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் குறித்த காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேற்படி தாக்குதலில் காயமடைந்த காவலாளி அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலும் இவர் முறைப்பாடு செய்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .