2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆரியகுளப் பிள்ளையாரை காணவில்லை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் பிள்ளையார் விக்கிரகம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு திருடப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று காலை (20) பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு சென்ற வேளையில் ஆலயத்தின் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகம் திருடப்பட்டுள்ளதை அவதானித்தார்.

தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினையடுத்து யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .