2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம் 2014 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான சுகுணா ஆரியதாஸ இன்று (21) தெரிவித்தார்.

நாளாந்த கூலித் தொழில் செய்வோர் 60 வயதை அடையும் போது, ஓய்வூதிய  நன்மைகளை பெறும் நோக்கில் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

வடமாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இத்திட்டத்தில் இலங்கையிலே 5 ஆவது அதிகூடிய பயனாளிகளைக் கொண்ட மாவட்டமாக யாழ்.மாவட்டம் (38000 பயனாளிகள்) திகழ்கின்றது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஜனவரியில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்ததுடன், தற்போது இத்திட்டத்தில் 658 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சுயதொழில் ஓய்வூதியத் திட்டம் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .