2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மனைவியையும் மகளையும் வெட்டிக் கொலை செய்தவர் கைது

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொடிகாமம் கச்சாய் பகுதியில்  மனைவியையும்; மகளையும் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபரான கணவன் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாம் தேவாலய வீதியைச் சேர்ந்த 36 வயதான லோகேஸ்வரன் ஜெயமேரி (வயது 36) மற்றும் 15 வயதான மகளான லோகேஸ்வரன் மேரிஜோகினி ஆகியோர்  கடந்த செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஜெயமேரியின் கணவர் திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் தம்பலகாமம் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 இன்று வியாழக்கிழமை (21) சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய கொடிகாமம் பொலிஸார் சந்தேகநபரை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியுடன் 24 மணிநேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

 மேற்படி வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் அதற்கு அனுமதியும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி:
தாயும் மகளும் வெட்டிக்கொலை: தந்தை தலைமறைவு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .