2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முதலமைச்சர் சி.வி யின் பதாகை கிழித்து எரியூட்டப்பட்டு சேதம்

Kanagaraj   / 2013 நவம்பர் 28 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் தாங்கிய பதாகை இனந்தெரியாத நபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் கிழித்து எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

யாழ். சிவகுருநாதர் வீதியிலமைந்துள்ள உதயன் விருந்தினர் விடுதியில் நடப்பட்டிருந்த பதாகையே இவ்வாறு கிழித்து எரிக்கப்பட்டுள்ளது.

விடுதியை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலால் ஏறிப்பாய்ந்த நபர்களே பதாகையை இவ்வாறு கிழித்து எரித்துவிட்டு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில், விக்னேஸ்வரன் தனது ஊடக சந்திப்புக்கள் சிலவற்றை மேற்படி விருந்தினர் விடுதியில் வைத்து நடத்தியமையினால் அப்பகுதியில் இப்பதாகை நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள் குணசேகரன் சுரேன்)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .