2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும்: மஹாநாயக்க தேரரிடம் கோரிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், சுமித்தி தங்கராசா

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்தரகித மஹாநாயக்க தேரரிடம் நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொணடுள்ள மஹாநாயக்க தேரர், யாழ். நல்லை திருஞான சம்பந்த ஆதீன மண்டபத்தில் நல்லை ஆதீன முதல்வரைச்  சந்தித்தபோதே மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த நல்லை ஆதீனம் முதல்வர், 'மஹாநாயக்க தேரரின் யாழ். வருகை மகிழ்ச்சியளிக்கின்றது. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையான சமாதானம் ஏற்படுத்த அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும். இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும்' என்றார்.

அத்துடன், 'தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படும் பசுவதைக்கு எதிரான நடவடிக்கைக்கு எங்களுடைய முழுமையான ஆதரவு இருக்கின்றது' என்றும் நல்லை ஆதீன முதல்வர் கூறினார்.

'இலங்கையில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவருமாறும்' ஆதீன முதல்வர் மேலும் வலியுறுத்தினார்.

இதன்போது, குறுக்கிட்ட யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயப்பெரேரா 'தேரரின் வருகை ஆன்மீகம் சார்;ந்த வருகையே. ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைக்க வேண்டாம்' என்று கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .