2025 ஜூன் 28, சனிக்கிழமை

அபிவிருத்திக்கு அமைச்சர் டக்ளஸ் பேருதவியாக இருப்பவர் - பிரதிஅமைச்சர்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடபகுதியின் அபிவிருத்திக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சங்கானையில் இன்றைய தினம் (15) இடம்பெற்ற யாழ்.மாவட்ட பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்துவதற்கான (பற்றிக்) பயிற்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் இப்பகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

இப்பேற்பட்ட உதவித் திட்டங்கள் கிடைக்கப் பெறுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள கரிசனையும் அன்பும் தான் காரணமாக அமைந்துள்ளது. 

கடந்த யுத்த காலப் பகுதியில் பாரிய அழிவையும் சேதங்களையும் சந்திருந்த இப்பகுதியின் அபிவிருத்திக்காக அமைச்சர் அவர்கள் அரசின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதனொரு கட்டமாகவே இப்பயிற்சி திட்டமும் அமைந்துள்ளதுடன், வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையிலான ஒரு நல்லுறவுப் பாலமாகவும் அமைச்சர் இருந்து வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகின் பல்வேறு நாடுகளில் பற்றிக் தொழிற்துறை காணப்படுகின்ற நிலையில் அதனை இங்கும் அறிமுகம் செய்து வைத்துள்ள அதேவேளை, அதனூடாக இங்குள்ளவர்களும் உரிய பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக யாழ்ப்பாண பற்றிக் என்ற தனித்தன்மையுடன் இப்பகுதியின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் கூடியதாக உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமை மற்றும் ஆலோசனைக்கு அமைவாக நான் கண்ணுற்றுள்ள கடந்த ஒன்றரை வருடங்களில் வடபகுதியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது. இவ்வாறான அபிவிருத்திகள் ஊடாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.

நாடளாவிய ரீதியில் அமைச்சினால் பல்வேறு தொழிற்துறை மேம்பாட்டு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாணத்திலும் பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனூடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியும். எனவே, இதனை உணர்ந்து கொண்டவர்களாக இப்பகுதியின் அபிவிருத்திக்கும் உங்களது வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அமைச்சர் அவர்களின் சிறந்த வழிகாட்டலுடன் முன்னேற்றம் காண வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .