2025 ஜூன் 28, சனிக்கிழமை

கொக்குவிலில் நகையும் பணமும் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொக்குவில் அம்மன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பணமும் தங்கநகைகளும் வியாழக்கிழமை (17) திருட்டுப் போயுள்ளதாக  யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு  55,000 ரூபா பணமும் 823,800 ரூபா பெறுமதியான 20 ½  பவுண் தங்கநகைகளும் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .