2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திறந்த பொருளாதாரத்தினால் தொழில் சங்கங்களின் முக்கியத்துவம் குறைவு

Super User   / 2014 மே 01 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

திறந்த உலகப்பொருளாதார அமைப்புக் காரணமாக தொழில் சங்கங்களின் முக்கியத்துவம் சற்றுக் குறைவடைந்து  காணப்பட்டாலும் உழைப்பாளர் தினத்தின் முக்கியத்துவம் குறைவடையவில்லை என்று வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

உலக உழைப்பாளர் நாள் தொடர்பாக அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலகெங்கிலும் வாழும் உழைக்கும் மக்கள் யாவரும் தத்தமது உரிமைகளை வென்றெடுக்கவும் நிலைநாட்டவும் கூட்டாக தீர்மானிக்கும் நாளாகவே ஒவ்வொரு வருடமும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாக கைக்கொண்டு வருகின்றார்கள்.

முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் உருவாக்கப்பட்டாலும் உலகின் சமதர்ம நாடுகள் பலவற்றிலும் பின்பற்றப்படும் தொழிலாளர் தினமாக இத்தினம் திகழ்கிறது.

வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை இது நாம் பதவிக்கு வந்த பின்பு நிகழும் முதலாவது மே தினமாகும். அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டதும், எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்துக்காக குரல் கொடுக்கும் தளமாக எமது மாகாணசபை உள்ளது.

தமிழினத்தைப் பொறுத்தவரை எமது சனத்தொகையில் 98 வீதமான மக்கள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களே. ஆகவே உழைக்கும் வர்க்கத்தினராகிய நாம் எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் பாரபட்சம், பாகுபாடு, அடக்குமுறை என்பவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய கட்டாயத் தேவையினுள்ளோம்.

எனவே இந்த மே தின நாளில் சாவகச்சேரியில் நடைபெறவுள்ள மேதினப் பேரணியிலும், கூட்டத்திலும் அனைவரும் கலந்துகொண்டு எமது உரிமைப் போராட்டத்தினை ஒற்றுமையை மீளவும் வலியுறுத்த ஒன்று சேரும்படி எல்லோரையும் வேண்டுகின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X