2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெண் தொழிலாளர்கள் சங்கம் அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுமித்தி தங்கராசா

பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான 'பெண் தொழிலாளர்கள் சங்கம்'; உலக தொழிலாளர் தினமாகிய வியாழக்கிழமை (01) யாழில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்புக்கான மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தொடர்பகம் காரியாலயத்தில் வியாழக்கிழமை (01) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதில், வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

இதன்போது, பெண்களிற்கான உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதனையடுத்து 19 பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய பெண் தொழிலாளர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், ஒத்துழைப்புக்கான மையத்தின் அங்கத்தவர்கள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X