2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் வியாழக்கிழமை (01) காலை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெண் தாதியர்களுக்கு மருத்துவ மாது பயிற்சி நெறியும், ஆண் தாதியர்களுக்கு மனநல மருத்துவ பயிற்சி நெறியும் வழங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் குறித்து போதனா வைத்தியசாலையின் தாதிய போதனாசிரியர் எஸ்.சிவயோகம் கருத்துத் தெரிவிக்கையில், 

தாதியர்களுக்கான 3 வருட பயிற்சி நெறியுடன் இணைத்து பெண் தாதியர்களுக்கு மருத்துவமாது பயிற்சி நெறியும் ஆண் தாதியர்களுக்கு மனநல மருத்துவ பயிற்சி நெறியும் வழங்கவேண்டும் என தொழிற்சங்கள் ஒன்றிணைந்து போராட்டம் மேற்கொண்டு அதற்கான அனுமதியினை பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் 2009 இ பிரிவு மாணவர்கள் இப்பயிற்சி நெறியினைப் பெறுவதற்காக கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் விடுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, மேற்படி பயிற்சி நெறிகளைக் கற்பிக்கும் வளவாளர்கள் விடுதிக்குள் வரவேண்டாம் எனத் தடுத்துள்ளனர்.

இதனால், குறித்த பயிற்சி நெறியினைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தாதியர்கள் இந்தக் கால வரையற்ற போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தீர்வு கிடைக்கும் வரையும் தொடர்ந்து போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X