2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் தீ விபத்து

Kanagaraj   / 2014 மே 02 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சொர்ணகுமார் சொரூபன்


யாழ்ப்பாணம் தட்டாதெரு பகுதியிலுள்ள வீடொன்றின் பகுதி இன்று வெள்ளிக்கிழமை(02) தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ குறித்து அறிவித்தும் அவ்விடத்திற்கு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் வருகை தரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது, வீட்டின் கூரை வழியே பெருமளவு புகை வருவதினை அவதானித்த அயலவர்கள் உடனடியாகச் சென்று தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

இருந்தும் வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளன.

இத் தீவிபத்து குறித்து அறிவித்தும் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வருகை தராமை குறித்து, தீயணைப்பு பகுதியின் பொறுப்பதிகாரி ஞானப்பிரகாசம் அன்ரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது;

'மேற்படி சம்பவம் தொடர்பாக தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றமை உண்மை. இருந்தும், மாநகர சபையின் குடிநீர் வழங்கல் பிரிவினர் குருநகர்ப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக எமது நீர்த் தாங்கி வண்டியினை எடுத்துச் சென்றமையினால் தீ அனர்த்தம் ஏற்பட்ட பகுதிக்கு எம்மால் செல்ல முடியவில்லை எனக் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X