2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.முத்தமிழ் முன்பள்ளியில் திருட்டு

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள முத்தமிழ் முன்பள்ளியிலிருந்த  பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முன்பள்ளி ஆசிரியரினால் வெள்ளிக்கிழமை (02)  முறைப்பாடு செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதவினை உடைத்து முன்பள்ளியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பணமும், சமையல் பாத்திரங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக முன்பள்ளி ஆசிரியரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுவருவதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X