2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மூவர் வெட்டிக் கொலை: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 04 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன் 

அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவரும் இனந்தெரியா நபரிகளினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்கோநாதன் அருள்நாயகி(50), யாசோதரன் மதுசா(27), நிக்கோநாதன் சுபாங்கன்(19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிக்கோநாதன் தர்மிகா (25), க. யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை எவ்விதமான உயிராபத்துகளும் இன்றி தப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X